புதுவிதமான அனுபவம் வழங்க தயாராகும் Samsung!
5 தை 2020 ஞாயிறு 17:25 | பார்வைகள் : 15695
புத்தாக்கம் மிகுந்த சாதனங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக Samsung Electronics நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த பத்தாண்டுக்கான திறன்பேசி அனுபவத்தை அவை வடிவமைக்கும் என்று அது குறிப்பிட்டது.
சாம்சுங், அடுத்த மாதம் 11-ஆம் தேதி அதன் S ரகப் புதிய திறன்பேசியையும் மடக்கிவைக்கக்கூடிய Galaxy Fold கைத்தொலைபேசியையும் வெளியிடவுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட முன்னோட்டப் படங்களில் ஒரு கைத்தொலைபேசி சதுர வடிவிலும் மற்றொன்று செவ்வக வடிவிலும் உள்ளன.
புதிய கைத்தொலைபேசிகள் மூலம், மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசிகளிலும் 5G இணையக் கட்டமைப்பு கொண்ட திறன்பேசிகளிலும் முன்னிலை வகிப்பது Samsung Electronics நிறுவனத்தின் நோக்கம்.
பிப்ரவரியில் இடம்பெறும் உலகத் திறன்பேசிக் கூட்டத்துக்குமுன், புதிய திறன்பேசிகளை அறிமுகம் செய்வது Samsung-இன் வழக்கம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan