Twitterஇல் ஆள்மாறாட்டம் செய்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

7 கார்த்திகை 2022 திங்கள் 11:38 | பார்வைகள் : 9800
Twitterஇல் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் முன் அறிவிப்பின்றி நிரந்தரமாக நீக்கப்படுவர் என்று நிறுவனத்தின் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க் எச்சரித்திருக்கிறார்.
அவர் நேற்று அந்த எச்சரிக்கையை விடுத்தார்.
நீலக் குறியீடு பெறும் Twitter பயனீட்டாளர்கள் மாதந்தோறும் 8 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்கள் பெயரில் மாற்றம் செய்தால் நீலக் குறியீட்டைத் தற்காலிகமாக இழந்துவிடுவர்.
தடைசெய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்படுத்தச் சில வாரங்கள் ஆகும் என்றும் இலோன் கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) கணக்கு அண்மையில் தடைசெய்யப்பட்டது.
எனவே, அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலுக்கு முன் அவரது Twitter கணக்கைப் புதுப்பிப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது.