Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் பதற்றம் - அதிரும் உலகம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் பதற்றம் -  அதிரும் உலகம்

28 பங்குனி 2026 சனி 05:51 | பார்வைகள் : 354


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானில் உள்ள ஒரு கனநீர் ஆலை மற்றும் 'மஞ்சள் கேக்' உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகள் மீது தங்கள் போராளிகள் பதிலடி கொடுப்பார்கள் என்று IRGC எச்சரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் முடியும் வரை, குறிவைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் (1 கி.மீ) சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.