தண்ணீரில் மூழ்கி 79 பேர் சாவு! - திடீரென அதிகரித்த விபத்துக்கள்!
13 ஆடி 2021 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 24152
கடந்த ஒரு மாதத்தில் நீரில் மூழ்கி 79 பேர் சாவடைந்துள்ளனர். 300 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரையான நாட்களில், நாடு முழுவதும் நீரில் மூழ்கி 314 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரான்சின் பொது சுகாதார பணிமனை அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இதே நாட்களுடன் ஒப்பிடுகையில் இது 22% வீதம் அதிகமாகும்.
இதே காலப்பகுதியில் 79 பேர் சாவடைந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 58% வீதத்தால் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நீச்சல் தடாகங்கள், நீர் நிலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர். இதுவே இந்த சாவு எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan