பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக நம்பும் பத்தில் ஒன்பது பேர்!
2 சித்திரை 2024 செவ்வாய் 15:57 | பார்வைகள் : 12364
ஒலிம்பிக் போட்டிகளுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கையில், பிரான்சில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக பத்தில் ஒன்பது பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று ஏப்ரல் 1 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. நாட்டு மக்களில் 92% சதவீதமானவர்கள் ‘பாதுகாப்பின்மையை’ உணருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரான்சில் இந்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாக அவதானிப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேற்படி கருத்துக்கணிப்பை Odoxa நிறுவனம் Le Figaro ஊடகத்துக்காக மேற்கொண்டிருந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan