மழைத்துளியா? மறுபிறவியா?

17 கார்த்திகை 2023 வெள்ளி 03:35 | பார்வைகள் : 7686
கங்கையும், கழனியும் !
கதிரவன் ஒளி பட்டு !
கணத்தில் ஆவியாகி !
அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். !
அடித்த காற்றில்,திசைமாறி, !
இடித்த இடியில்,இடம் மாறி!
கங்கையிலும் கழனியிலும், மறுபடியும் !
விழுந்த மழைத் துளியில் !
கங்கை எது ?கழனி எது ? !
மாகானும் மாபாவியும் !
காலனின் கயிறு தொட்டு!
நொடியில் ஆவி அடங்கி!
அண்டம் தொடாத,ஆத்மாக்களாய் உலவும். !
பாவக்கணக்கில் இடம் மாறி!
புண்ணியக் கணக்கில்,இனம் மாறி!
மகானாய் மாபாவியாய் என்றிருக்க,மறுபடியும் !
ஜனித்த சிசுக்களில்!
மகான் யார் ?மாபாவி யார் ?
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1