பதவி விலகுவதாக அறிவித்த கெய்ர் ஸ்டார்மர்
2 புரட்டாசி 2026 புதன் 06:21 | பார்வைகள் : 126
எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ரஸ் தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2015 முதல் இந்த லண்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அவர், சர்வதேச விவகாரங்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ஸ்டார்மர், கடந்த ஜூலையில் பதவி விலகினார்.
அப்போது அவர் 2029 பொதுத் தேர்தல் வரை எம்.பி ஆக தொடருவதாக கூறியிருந்தாலும், தற்போது திடீர் முடிவெடுத்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் ஸ்டார்மரின் உக்ரைன் தொடர்பான பணி மற்றும் ஹில்ஸ்பரோ சட்டம் போன்ற சாதனைகளை பாராட்டினார். “நாட்டிற்கு நீண்ட கால சேவை செய்தவர்” என அவர் புகழ்ந்தார்.
இடைத்தேர்தலில் லேபர் கட்சிக்கு முக்கிய சவாலாக பசுமைக் கட்சி (Green Party) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய உள்ளூர் தேர்தல்களில் பசுமைக் கட்சி வாக்கு விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஸ்டார்மர், “இது சரியான நேரம். நான் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். இனி சர்வதேச பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்துவேன்” எனக் கூறினார்.
சிலர் அவரை பாராட்டினாலும், எதிர்க்கட்சிகள் “மற்றொரு யூ-டர்ன்” என விமர்சித்துள்ளனர்.



