மனைவியைக் கொலை செய்துவிட்டு கால்வதுறையினரை அழைத்த நபர்

26 புரட்டாசி 2023 செவ்வாய் 17:15 | பார்வைகள் : 12667
நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, காவல்துறையினரை அழைத்துள்ளார். 51 வயதுடைய பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Toulouse நகரில் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உள்ளூர் காவல்நிலையம் ஒன்றுக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளார். அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
அங்குள்ள வீடொன்றில், இரத்த வெள்ளத்தில் 51 வயதுடைய பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தலையில் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய அவரது 54 வயதுடைய கணவர் சடலத்துக்கு அருகே அமர்ந்திருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1