Paristamil Navigation Paristamil advert login

பாசத்தின் விலை..

பாசத்தின் விலை..

9 பங்குனி 2012 வெள்ளி 00:22 | பார்வைகள் : 16252


 

அம்மா என்ன சொல்லில்
நடமாடும் தெய்வமே!
சுமையின் வலி பொறுத்து
உன்னை எனதாக்கி
மண்ணுலகில் எனை விட்டு
விண்ணுலம் சென்றாயோ?

படிநிலைகள் மாறி
பருவ நிலைகள் பல கடந்தும்
பாசம் என்னும் ஒன்றுக்கு
ஏக்கும் குழந்தையாய்
இன்றும் என் வாழ்வு..

வாழ்வில் சுழற்சியில்
சந்தித்திட்ட
பல்முகம் கொண்ட
பல சொந்தங்கள்
ஒன்றையொன்று போட்டி போட்டு
போடுது நல்ல வேசங்கள்
தினம் தினம்.

சுயநலம் கொண்ட உலகில்
பாசம் ஒன்றை தேடி
நெடுந்தூரம்
சென்ற விட்டேன்
எங்கும் காணல் நீராய்
எதிலும் வெறுமையாய்...
பணம் இருந்தால்
இதயம் திறக்குமாம்
பாசம் சுரக்குமாம்
மனிதர்களுக்கு...

வாழ்க்கை பயணத்தில்
சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து போக
பேருந்து நிலையமாய்
என் இதயம்..

வலிக்குதம்மா மனசு
சோகத்தை சொல்லியழ
அரவணைப்பு தர
யாருமற்ற அநாதையாய்
அவதியுறும் உன் பிள்னளயின்
நிலையினை கண்டாயா?

ஆசைகளை எனதாக்கி
ஏக்கங்களில் தவித்து
சித்திரைவதைகளை
அனுபவிக்கும் எனக்கு
தாய்மடியில் தலை
சோகங்களை சொல்லிழ
அருகில் வந்து எனை
அணைத்துக் கொள்வாயா?
இல்லை உன் அருகில்
இணைத்துக் கொள்வாய்யா?

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்