Paristamil Navigation Paristamil advert login

ஒரு காதலும்... இரு நாமும்...!

ஒரு காதலும்... இரு நாமும்...!

14 தை 2018 ஞாயிறு 12:33 | பார்வைகள் : 14164


படபடக்கும் எந்தன் நெஞ்சில்

நீ தொடுக்கும் பார்வை அம்பு
உயிரில் குத்தி கிழியுதே...!
காதல் மெல்ல வழியுதே...!!
 
பருகும் தேனீர் கோப்பைக்குள்ளே
தெரியும் உந்தன் முகம்
காலை தென்றலாய் வருடுதே...!
கனவின் மீதியாய் தொடருதே...!!
 
நகராத மேகக்கூட்டம்
மழை கொட்ட நேரம் தேடி
சிறு மின்னனாய் வெடிக்குதே...!
உன்னை காண என்னைபோல் துடிக்குதே...!!
 
காற்றின் வழியே காதில் நுழையும்
இசையில் வழியும் கவிதை வரிகள்
நீயும் நானும் ஒன்று என்று சொல்லுதே...!
நீயில்லாத தனிமைகளை கொல்லுதே...!!
 
போர்வை மறைத்த தேகக்கூடும்
விளக்கணைத்த இரவு காடும்
உன் நினைவுகளில் முடியுதே...!
உனை காணவேண்டி விடியுதே...!!
 

வர்த்தக‌ விளம்பரங்கள்