என் நண்பன் இவன்...!

19 புரட்டாசி 2021 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 14560
என்னுடனே வாழ்வில்
பயணித்தவன்
இவன்
இன்ப துன்பங்களை
இவனிடம் சொல்லாமல்
இருந்ததில்லை
திருமணம் உட்பட
இதனால் பல பேர்
என்னை பைத்தியம்
என்று
சொல்லியிருக்கிறார்கள்
ஆனால் நீ
என்னிடம் இதுவரை
ஒரு வார்த்தை
கூட பேசியதில்லை
இருந்தாலும் என் வயது
இவனுக்கு
இது போதும் எனக்கு
என் தந்தை தாய்
இருவரையும் நீயும்
பார்த்திருக்கிறாய்
இப்பொழுது நடப்பதை
பாரேன் !
இருவரையும்
பிரித்து என்னை
மயானத்திற்கும் உன்னை
விலைக்கும்
அனுப்பி விட்டார்கள்
எண்பது வருட
மரமாம்
நல்ல விலை
அவர்களுக்குள் பேசி
கொண்டு
மயானத்திற்கு என் உடல்
சென்றது
உன் பிரிவால்தான்
என் பிரிவை
குடும்பத்தினர்
வயதின் முடிவு என்று
முடித்து விட்டார்கள்
இருந்தும் மகிழ்ச்சி
இது வரை வாழ்ந்த
என் உடல் எரிக்கவோ
புதைக்கவோ
ஆனால் !
நீ மட்டும் அதிக
விலை கொண்டு
உருமாறி இந்த
உலகத்தில் உலவ
போகிறாய்
உனக்கு பேசும்
சக்தி
என்றாவது கிடைத்தால்
எனக்கு மனிதன்
ஒருவன் நண்பனாக
இருந்தான்
அறிவித்தால் போதும்
இந்த பூவுலகில்
வாழ்ந்து சென்ற
பயனை அடைந்து
விடுவேன்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025