பொய்முகங்கள்...!!!
31 ஐப்பசி 2021 ஞாயிறு 12:12 | பார்வைகள் : 16817
அன்று
திருவள்ளுவர்
எழுதி வைத்தான்
துன்பம் வரும்போது
சிரியுங்க என்று...
இன்று
நாமும் சிரிக்கின்றோம்
துன்பம் வரும்போது
மற்றவர்களுக்கு.
அக்டோபர் இரண்டில்
அண்ணல் காந்திஜெயந்தி
கொண்டாடி மகிழ்கிறோம்
கொள்கைகளை காற்றில்
பறக்க விட்டுவிட்டு....
மழைவெள்ளம் வந்தால்
மக்களுக்கு திண்டாட்டம்
அரசியல்வாதிகளுக்கு
இங்கு கொண்டாட்டம் !
வெள்ளநிவாரண நிதி
வழங்கும்போது
ஆடம்பர மேடையில்
அப்பாவி மக்களிடம்
பொய் முகம் காட்டும்
இந்நாட்டு மன்னர்கள் !
என்று தணியும்
இந்த விளம்பரதாகம்
அண்ணல் காந்தி
வாழ்ந்த நாட்டில்
வெட்கக்கேடு
மலிவான அரசியல்வாதிகள்!.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan