மரம் ...!
6 கார்த்திகை 2021 சனி 16:15 | பார்வைகள் : 15530
நின்ற
இடத்தில்
நின்று கொண்டு ....
காற்றடித்தால்
மட்டுமே
தலையசைத்துச்
சிரித்து ...
யாரும்
தன்னை
அரவணைக்காத
போதும் ...
அலட்டிகொள்ளது
அமைதி காத்து ...
முற்றிலுமாய்
இலையுதிர்ந்து
போனாலும் ...
மேகம் பார்த்து
மேகம் பார்த்து
நாளை என்ற
நம்பிக்கை வளர்த்து ....
வளர்த்த
நம்பிக்கையில்
உயிர் காத்து ....
மீண்டும்
தளைத்துச்
செழித்து ...
பேசாமல்
மரமாகவே
பிறந்திருக்கலாம் ....


























Bons Plans
Annuaire
Scan