Paristamil Navigation Paristamil advert login

காலத்தின் பிடியில்

காலத்தின் பிடியில்

24 புரட்டாசி 2020 வியாழன் 16:25 | பார்வைகள் : 13029


இவனிடம் கேள்
 
இவன் சொல்லியதை
 
 
செவி மடுத்து கேட்பார் யாரோ
 
 
இவன் செப்பியதை
 
 
உடல் கூறுகளும் செவியுறுவதில்லை
 
 
ஆதி சிரம் முதல் 
 
 
பாதம் இறுதி வரை
 
 
கூடாது எனச் சொன்னால்
 
 
பிணி அகன்றிடுமோ
 
 
அகமதை தன் வழியில்
 
 
அமைத்திட முடியுமா
 
 
அகம் வழியில் இவன் 
 
 
செல்லாமல் இருக்க இயலுமா
 
 
ஆயினும் தன்னை அணுகியவன்
 
 
தன் மன அசைவின் படி
 
 
ஆடினால் தான் அக மகிழ்வேன்
 
 
என்பதெல்லாம் முறையாமோ
 
 
காலத்தின் கோலத்தில்
 
 
அகப்படாமல் வாழ்ந்திட தகுமோ...

வர்த்தக‌ விளம்பரங்கள்