Paristamil Navigation Paristamil advert login

விவசாயி புலம்பல்

விவசாயி புலம்பல்

4 தை 2021 திங்கள் 16:59 | பார்வைகள் : 17100


கூட்டாட்சித் தத்துவத்தில்           
 
கூண்டுக்கிளியின் அரசாட்சி
 
குடும்பத்தோடு உழைச்சாலும்
 
கோவணமே அதுக்குச் சாட்சி
 
நஞ்சையில களைய போல
 
நல்லவங்க யாருமில்ல
 
நம்பிக்கை எனக்கு இல்ல
 
பொழப்பு நட்டத்தில் போதுபுள்ள
 
வெள்ளாமை விளைஞ்ச தெல்லாம்
 
தன்னால அழியுதயா!
 
வெம்பாடு பட்டதெல்லாம்
 
வெறும்கையா நிக்க தானா!
 
அரளிப் பூ போல அரவணைக்க ஆளில்ல
 
தப்பிக்க பிழைக்க வழியில்லை
 
தாகம் தீர்க்க ஆளில்லை!
 
இப்படிக்கு... உங்கள் விவசாயி.

 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026