Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தினமும் காலையில் உங்கள் துணையை புத்துணர்ச்சியாக உணர வைக்க இதை செய்யுங்கள்..

தினமும் காலையில் உங்கள் துணையை புத்துணர்ச்சியாக உணர வைக்க இதை செய்யுங்கள்..

18 புரட்டாசி 2021 சனி 18:36 | பார்வைகள் : 13218


 தம்பதிகள் காலையில் எழுந்ததும் சோர்வாக உணராமல் புத்துணர்ச்சியாக இருப்பது அவசியம். அப்போது தான் அந்த நாள் சிறப்பாக செல்லும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் துணையை தினமும் காலையில் பிரெஷ்ஷாக உணர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

 
வாசனை திரவியம் :தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் குளித்துவிட்டு உங்கள் அறையில் உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தை சிறிது தெளிக்கவும். இதனால் உங்கள் துணை எழுந்தவுடன் மிகவும் பிரெஷ்ஷாக உணர்வார். இதனால் உங்கள் நாள் மிகவும் அழகாக தொடங்குவதை நீங்கள் காண முடியும்.
 
ஐ லவ் யூ கூறுங்கள் : தம்பதிகள் அடிக்கடி ஐ லவ் யூ சொல்வதால் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? காலையில் எழுந்தவுடன் உங்கள் துணையை பார்த்து "ஐ லவ் யூ" என கூறுங்கள் அல்லது 'ஐ லவ் யூ' என ஒரு குறிப்பேட்டில் எழுதி கொடுங்கள். இதனை பார்க்கும் உங்கள் துணை மிகவும் மகிழ்ச்சியடைவார்.
 
காலை வணக்கம் : தினமும் உங்கள் கூட்டாளருக்கு 'காலை வணக்கம்' சொல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்கள் இருவரையும் நெருக்கமாக வைத்திருக்க உதவும். எனவே தினமும் காலை வணக்கம் சொல்வதை தவறவிடாதீர்கள். மேலும் நீங்கள் இருவரும் எழுந்தவுடன் ஒருவருக்கொருவர் கண்களை பார்த்து கொள்ளுங்கள். இது அன்பை பரிமாறுவது மட்டுமின்றி, சோம்பேறி உணர்வையும் நீக்கும்.
 
அறையை சுத்தம் செய்யுங்கள் : காலையில் எழுந்தவுடன் உங்கள் படுக்கையை ஒழுங்கமைத்து, சுத்தம் செய்யுங்கள். காலை எழுந்தவுடன் இது சோர்வாக இருக்கலாம் ஆனால் சுத்தம் செய்த பிறகு நீங்கள் இருவரும் நிச்சயமாக புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். எனவே இருவரும் சேர்ந்தும் கூட சுத்தம் செய்யலாம்.
 
.
பூக்கள் கொடுங்கள் : உங்கள் நாளை அழகான பூக்களுடன் தொடங்குவது இன்னும் சிறப்பானதாக அமையும். காலையில் எழுந்தவுடன் பூக்கள் கொடுத்து உங்கள் துணியை மகிழ்விக்கலாம். அதன் பின்னர் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உங்களது நாள் சுறுசுறுப்பாக இருக்கும்.
 
 
குளியல் :காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது இருவருக்குமே அவசியமானது. இதனால் நீங்கள் சோர்வின்றி உங்கள் நாளை தொடங்க முடியும். இருவரும் சேர்ந்து ஒன்றாக குளிப்பது உங்கள் நாளை புத்துணர்ச்சியாக மாற்றுவது மட்டுமின்றி ரொமான்டிக்காகவும் மாற்றும்.
 
 
தொலைபேசி வேண்டாமே :தற்போது பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் தொலைபேசி பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். நீங்கள் இருவரும் காலையில் முக்கிய வேலைகளை முடிக்கும் வரை காலையில் உங்கள் தொலைபேசிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக காலை நேரத்தை நீங்கள் இருவரும் ஒன்றாக செலவிடலாம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்