Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணம்

உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணம்

22 ஆடி 2026 புதன் 07:19 | பார்வைகள் : 166


அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.

அப்போது, ஜேர்மனி மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் பாகுவில் (Baku) ரகசியமாக சந்தித்ததாக உறுதிப்படுத்தினார்.

அலியேவ் கூறியதாவது: “எங்கள் நாட்டின் நிலப்பரப்பை, எங்களுக்குத் தெரியாமல் இந்த சந்திப்புக்கு பயன்படுத்தினர். விமானப் பதிவுகள் மூலம் அந்த சந்திப்பு நடந்தது உறுதியாகிறது” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் அங்கேலா மேர்கலின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரோனால்ட் போஃபல்லா, பிராண்டன்பர்க் மாநில முன்னாள் தலைவர் மத்தியாஸ் பிளாட்செக் ஆகியோர் பங்கேற்றனர்.

ரஷ்ய தரப்பில், விக்டர் சூப்கோவ் (Gazprom தலைவர், முன்னாள் பிரதமர்) மற்றும் வலெரி ஃபடேயேவ் (ரஷ்ய குடியரசுத் தலைவரின் மனித உரிமை கவுன்சில் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால், ஜேர்மன் அரசுக்கு இந்த சந்திப்பில் எந்தவித பங்கும் இல்லை என்று சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார். தனக்கு இப்படியான சந்திப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்பு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் வழிகளை ஆராய்வதற்காக நடந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

அலியேவ், “இந்த சந்திப்பு உண்மையில் போருக்கு முடிவு காண உதவுவதாக இருந்தால், அதை வரவேற்கிறோம்” என்றார்.

அசர்பைஜான், 2022-இல் ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, இரு தரப்புடனும் உறவை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறது.

ஆனால், 2024-இல் ரஷ்ய விமானப்படை தவறுதலாக அசர்பைஜான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம் இரு நாடுகளின் உறவை பாதித்தது.

இந்த ரகசிய சந்திப்பு, ஜேர்மனி-ரஷ்யா இடையிலான பின்வழி (back-channel) தொடர்பு முயற்சியாக கருதப்படுகிறது.

இது, உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.