Paristamil Navigation Paristamil advert login

15 வயதிற்குக் குறைவானோரின் சமூக வலைத்தளக் கணக்குகள் மூடப்படும்!!

15 வயதிற்குக் குறைவானோரின் சமூக வலைத்தளக் கணக்குகள் மூடப்படும்!!

21 ஆடி 2026 செவ்வாய் 15:36 | பார்வைகள் : 411


15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் சட்ட முன்வரைவுக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி ஒப்புதல் வழங்க உள்ளது. ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இந்தச் சட்டம், 2026 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 15 வயதிற்குக் குறைவானவர்கள் புதிய சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே உள்ள கணக்குகள் 2027 ஜனவரி 1 முதல் மூடப்படும்.

YouTube-இல் வீடியோக்களைப் பார்ப்பது அல்லது WhatsApp போன்ற தனிப்பட்ட செய்தியிடல் சேவைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்படாது. ஆனால், கருத்துரைகள், சேனல்கள் போன்ற சமூக வலைத்தள அம்சங்களைப் பயன்படுத்த வயது சரிபார்ப்பு கட்டாயமாகும். இந்த வயது சரிபார்ப்பை எந்த முறையில் மேற்கொள்வது என்பது குறித்து சட்டம் குறிப்பிட்ட நடைமுறையை வகுக்கவில்லை; அதனை இணைய தளங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தச் சட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, 2026 கல்வியாண்டு முதல் உயர்நிலைப் பாடசாலைகளிலும் செல்போன் பயன்பாடு தடை செய்யப்படுகிறது. இருப்பினும், பாடசாலையின் விதிமுறைகளின் அடிப்படையில் சில விதிவிலக்குகள் வழங்கப்படலாம். உயர்கல்விப் பாடத்திட்டங்கள் நடைபெறும் சில கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தனிப்பட்ட விதிமுறைகளும் அமுல்படுத்தப்படலாம்.

மேலும், பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு சமூக வலைத்தளங்களின் அடிமைத்தன்மை, திரைகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மனநல ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.