இனிப்புப் பொதிக்குள் சிக்கிய மர்மம் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது
18 ஆடி 2026 சனி 15:05 | பார்வைகள் : 140
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), சுமார் 1.816 கிலோகிராம் கொக்கெய்னை நாட்டுக்குள் கடத்த முயன்றதாக 23 வயதுடைய மலேசியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCU) தெரிவித்ததாவது, சந்தேகநபர் மலேசியாவில் இருந்து துபாய் ஊடாக Emirates EK650 விமானத்தில் இன்று (18) காலை இலங்கை வந்துள்ளார்.
காலை சுமார் 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட பயணப்பொதி பரிசோதனையின் போது, அவரது கைக்குழாயில் இருந்த உணவு மற்றும் இனிப்புப் பொருட்கள் அடங்கிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 92 காப்ஸ்யூல்களில் 1,816 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னின் தெரு சந்தை மதிப்பு சுமார் 90.8 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் வழக்குத் தொடர்பான பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire