Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர்

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர்

23 வைகாசி 2026 சனி 10:12 | பார்வைகள் : 177


இந்திய வீரர் விஐய் சங்கர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், 2018 முதல் 2019 வரை இந்திய தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.

12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 223 ஓட்டங்களும், 4 விக்கெட்களும் எடுத்துள்ளதோடு, 9 T20 போட்டிகளில் விளையாடி, 101 ஓட்டங்களும், 5 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

2016-17 ஆம் ஆண்டில் விஜயஹசாரே கோப்பை மற்றும் தியோதர் கோப்பை, 2021 - 22 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பையை ஆகியவற்றை வென்ற தமிழ்நாடு அணிக்குத் தலைமை தாங்கினார்.

மேலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி டேர்டவில்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிரிக்கெட் நீ வாழ்க்கை. 10 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். 25 வயதில் கிரிக்கெட்டின் உயரிய வடிவத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

நாட்டிற்காக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் ஆகும். நான் மேலும் பல புதுவகையான கிரிக்கெட்டில் விளையாட உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார்.  

இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.