Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் மிகபெரிய விமானத்தின் முன்சக்கரம் உடைந்து பலர் காயம்

ஜேர்மனியில் மிகபெரிய விமானத்தின் முன்சக்கரம் உடைந்து பலர் காயம்

5 ஆனி 2026 வெள்ளி 12:12 | பார்வைகள் : 217


ஜேர்மன் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.

வியாழக்கிழமையன்று(4) ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் ஒரு நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​லுஃப்தான்சா நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 787 ரக விமானம் ஒன்றின் முன்சக்கர அமைப்பு உடைந்தது.

இந்தச் சம்பவத்தில் பல ஊழியர்கள் காயமடைந்ததாக லுஃப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் அந்த விமானத்தில் பயணிகள் இன்னும் ஏறவில்லை.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் பயணத்தின்போது, ​​தாய்வான் வெளிவிகார அமைச்சர் லின் சியா-லுங் (Lin Chia-lung) உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்வான் பயணத்திலிருந்து திரும்பிய பின்னரே சீனா விதித்த தடை குறித்த தகவலைப் பெற்றனர். மன்னிப்புக் கோரப்பட்டால், தடையைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை தாய்வானுக்கு பயணித்த அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு சீனா இதற்கு முன்பும் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.