Paristamil Navigation Paristamil advert login

மொஜ்தபா கமேனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்

மொஜ்தபா கமேனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்

4 ஆனி 2026 வியாழன் 08:30 | பார்வைகள் : 181


மத்திய கிழக்கில் போர் தாக்குதலை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் மேற்கொண்டது.

பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

யூடியூபில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் அமெரிக்க அதிபர் இதைத் தெரிவித்தார்.

அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ அல்லது புதிய அணு ஆயுதங்களை உருவாக்கவோ மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் மேலும் கூறினார்.