Paristamil Navigation Paristamil advert login

அலைமோதியது கூட்டம் ஆர்வமா, அலையா?

அலைமோதியது கூட்டம் ஆர்வமா, அலையா?

24 சித்திரை 2026 வெள்ளி 04:08 | பார்வைகள் : 305


தமிழகத்தில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுச்சாவடிகளில் இதுவரை பார்க்காத வகையில், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் பலரும், காலை முதல் காத்திருந்து ஓட்டளித்தனர்.

பல மாவட்டங்களில் பகல் நேர வெயில் சுட்டெரித்தது. அதை பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்திருந்தனர். இது வாக்காளர்களின் மவுன புரட்சியா; கடும் போட்டியே காரணமா; இளைஞர்கள் ஆர்வமா; மாற்றத்திற்கான அறிகுறியா; ஆதரவு அலையா என, அரசியல் கட்சிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள், தங்களது ஐந்தாண்டு கால திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அமோக ஆதரவளித்துள்ளதாக, தி.மு.க.,வினர் பெருமிதம் கொள்கின்றனர். ஐந்து ஆண்டுகால அரசின் அவலத்திற்கு எதிராக, மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் உறுதியாக கூறுகின்றனர். இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சியாக ஓட்டளித்துள்ளது, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என, த.வெ.க.,வினர் நம்புகின்றனர்.