Paristamil Navigation Paristamil advert login

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

23 சித்திரை 2026 வியாழன் 08:09 | பார்வைகள் : 213


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான முகமது நவாஸ் போதைப்பொருள் சோதனையில் சிக்கியுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற T20 உலக கிண்ணத்தில் வீரர்கள் பங்குபெறும் முன்னர் அனைவருக்கும் வழக்கமான ஊக்கமருந்து மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.  

இதில், முகமது நவாஸிடம் பெறப்பட்ட மாதிரியில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு(PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்தாகவும், முகமது நவாஸ் மீது பிசிபி முறைப்படியான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், முகமது நவாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், ஏப்ரல் 30 ஆம் திகதி மீண்டும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் வெளியான பின்னர், இங்கிலாந்தில் மே 22 ஆம் திகதி தொடங்கவுள்ள T20 பிளாஸ்ட் தொடரில், சர்ரே அணிக்காக விளையாட முகமது நவாஸ் செய்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முகமது நவாஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.