Paristamil Navigation Paristamil advert login

சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு: தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்

சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு: தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்

23 சித்திரை 2026 வியாழன் 07:22 | பார்வைகள் : 308


தேர்தலையொட்டி பிரதான சாலைகளில், போலீஸ் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு, தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

தேர்தலையொட்டி பிரதான சாலைகள் உள்ளிட்ட வழித்தடங்களில், போலீஸ் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பெண் வாக்காளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், பெண் காவலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பறக்கும் படை செயல்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்.

சிசிடிவி, ட்ரோன், வீடியோ' கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் மூத்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு போதுமான குடிநீர், இருக்கை, நிழல் வசதிகள் ஏற்படுத்தி தருவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.