4 முதல் 6 பில்லியன் யூரோக்கள் வரை செலவுக் குறைப்பு? பொது நிதி எச்சரிக்கை குழு கூட்டம் அவசர ஆலோசனை !!
21 சித்திரை 2026 செவ்வாய் 07:34 | பார்வைகள் : 2590
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக பிரெஞ்சு அரசாங்கம் தனது பொருளாதார முன்னறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புதிய செலவுகள் மேற்கொள்ளப்பட்டால் அவை கட்டாயம் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெறும் பொது நிதி எச்சரிக்கை குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
2025ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குழு, அரசின் நிதிக் குறைபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உடனடி செலவுக் குறைப்புகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக தகவல்களின் படி, 4 பில்லியன் முதல் 6 பில்லியன் யூரோக்கள் வரை செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி வீதம் 1% இலிருந்து 0.9% ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன், பணவீக்கம் 1.3% இலிருந்து 1.9% ஆக உயர்ந்துள்ளது. போர் காரணமாக வரிவருவாய் குறைதலும், பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்தலும் அரசின் நிதி நிலையை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடன் வட்டி செலவுகள் மாதத்திற்கு சுமார் 300 மில்லியன் யூரோக்கள் அளவில் அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளும் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன.
இந்த சூழ்நிலையில், அரசாங்கம் தேவையான செலவுகளை மேற்கொள்ளும் போதும், அதற்கு இணையான செலவுக் குறைப்புகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரவிருக்கும் நாட்களில் எந்த துறைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாக தெரியாத நிலையில், இந்த முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire