Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் காயமடைந்த பிரெஞ்சுவீரர்கள் இருவரின் நிலைமை கவலைக்கிடம்!

லெபனானில் காயமடைந்த பிரெஞ்சுவீரர்கள் இருவரின் நிலைமை கவலைக்கிடம்!

19 சித்திரை 2026 ஞாயிறு 10:34 | பார்வைகள் : 949


லெபனானின் தெற்கில் FINUL அமைதிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்டதாக்குதலில் பிரெஞ்சு படைவீரர்கள் காயமடைந்த நிலைமை குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் புது அறிக்கை வெளியடப்பட்டுள்ளது.

லெபனானில் சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில்:

சார்ஜெண்ட் அதிகாரி மொந்தோரியொ உயிரிழந்தார்

மூன்று  பிரெஞ்சுவீரர்கள் காயமடைந்தனர்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி:

காயமடைந்த மூவரில் இருவரின் நிலைமை ஆபத்தான நிலையில், கவலைக்கிடமாக உள்ளதாகவும், மூன்றாவது படைவீரர் நிலையான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர்:

தாக்குதலை “மிகவும் கடுமையாகக் கண்டித்தார்”

காயமடைந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு மற்றும் FINUL படையினருக்கு, பிரான்ஸ் அரசின் முழு ஆதரவை தெரிவித்தார்.பொறுப்பாளர்களை நீதிக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.