Paristamil Navigation Paristamil advert login

அரசியல் எதிரொலிகள் - லெபனானில் கொல்லப்பட்ட பிரெஞ்சு வீரர் - விபரங்கள்!

அரசியல் எதிரொலிகள் - லெபனானில் கொல்லப்பட்ட பிரெஞ்சு வீரர் - விபரங்கள்!

19 சித்திரை 2026 ஞாயிறு 09:50 | பார்வைகள் : 289


18 ஏப்ரல் 2026 அன்று லெபனானின் தெற்கில் பிரெஞ்சு படைவீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அதனைச் சுற்றியுள்ள பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராணுவ எதிர்வினைகளின் விபரங்கள்

சனிக்கிழமை 18 ஏப்ரல் காலை, லெபனானின் தெற்கிலுள்ள Andouriya கிராமத்தில்
பிரெஞ்சு படைவீரர் sergent-chef Florian Montorio உயிரிழந்தார்.

Media

தாக்குதல் இலகு ஆயுதத்திலிருந்து நேரடி துப்பாக்கிச் சூடு மூலம் நிகழ்ந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் FINUL (ஐ.நா. லெபனான் இடைக்கால படை) செயல்பாட்டு பகுதிக்கு அருகில் நடந்தது.

பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எம்மானுவல் மக்ரோன், X தளத்தில் வெளியிட்ட செய்தியில்:

இந்தத்  தாக்குதலுக்கான பொறுப்பு Hezbollah-க்கு செல்லும் வாய்ப்பு அதிகம் எனக் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் படைவீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

லெபனான் அதிகாரிகளை குற்றவாளிகளை கைது செய்ய  FINUL உடன் முழுமையாக ஒத்துழைக்கவும்  மக்ரோன் அழைத்தார்.

இராணுவ அமைச்சகத்தின் விளக்கம்

பிரான்ஸ் ஆயுதப்படைகள் அமைச்சர் கத்ரின் வோத்ரன் (Catherine Vautrin) தெரிவித்ததாவது:

சேர்ஜன்ட் அதிகாரி Montorio பல நாட்களாக போரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த FINUL நிலையத்திற்கான
பாதை திறப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் மிக அருகிலிருந்து ஆயுதம் ஏந்திய குழுவின் மறைந்திருந்து நடாத்திய தாக்குதலில்  .சிக்கியதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியின் பாதுகாப்பு சூழ்நிலை

Litani ஆற்றின் தெற்கில் Andouriya கிராமம்.

“Ligne jaune” எனப்படும்  இஸ்ரேல் படை (Tsahal) செயல்பாட்டு எல்லைக்கு அருகில்

Quneitra கிராமத்திலிருந்து சுமார் 2.5 கிமீ தூரத்தில்

Hezbollah செயல்பாடுகள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் நடந்துள்ளது.

இந்த பகுதி:

FINUL நிலைகளுக்கு எதிராக Hezbollah அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தும் பகுதியாக அறியப்படுகிறது.

சர்வதேச படைகளின் பாதுகாப்பு மிக நுணுக்கமான நிலையில் உள்ளது.

லெபனான் அரசின் எதிர்வினை

லெபனான் குடியரசுத் தலைவர்:

பிரெஞ்சு அமைதிப்படை (Casques bleus) மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாகக் கண்டித்தார்.

பொறுப்பாளர்களை நீதிக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தார்.

இந்த தாக்குதலில்:

சர்ஜன்ட்-அதிகாரி  Montorio உயிரிழந்ததுடன்

மூன்று பிரெஞ்சு படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய தொடர்புடைய சம்பவம்

இந்த மரணம், ஒரு மாதத்திற்கு முன் Erbil (இராக் குர்திஸ்தான்) பகுதியில்
பிரெஞ்சு படைவீரர் துணை அதிகாரி Arnaud Frion  
ஒரு ப்ஈரானிய ஒட்டுக்குழு மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து  நடந்துள்ளது.


இந்த சம்பவம்:

லெபனானின் தெற்கில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடியின் தீவிரத்தையும், FINUL படைகளின் அபாயகரமான செயல்பாட்டு சூழ்நிலையையும்,
பிரான்ஸ் மற்றும் லெபனான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியத்தையும்  வலியுறுத்துகிறது.

பிரான்ஸ் அரசு, FINUL மற்றும் லெபனான் அதிகாரிகளுடன் இணைந்து அந்த நிலையை நிலைநிறுத்தவும், பொறுப்பாளர்களை நீதிக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளைத் தொடரும்.

 

எழுத்துரு விளம்பரங்கள்