பொருட்களின் விலையேற்றம் 4 முதல் 5 சதவீதமாக அதிகரிப்பு!!
18 சித்திரை 2026 சனி 21:17 | பார்வைகள் : 527
மத்திய கிழக்கு போரின் காரணமாக அடுத்த சில மாதங்களில் கடைகளில் உள்ள பொருட்களின் விலை 4% முதல் 5% வரை அதிகரிக்கலாம் என UFC-Que Choisir மதிப்பிட்டுள்ளது. ஆனால், இது 2022–2023 உக்ரைன் போருக்குப் பிந்தைய உயர்வைப் போல அதிகமாக இருக்காது.
இந்த விலையேற்றம் உடனடியாக அல்லாமல், பல மாதங்களுக்கு மெதுவாகப் பரவியிருக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே விலையை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் இருந்தாலும், எரிசக்தி மற்றும் உர விலை உயர்ந்தால் மாற்றங்கள் செய்யப்படும்.
முதலில் பாதிக்கப்படுவது குறுகிய காலாவதி கொண்ட பொருட்கள் ஆகும். குறிப்பாக பால் பொருட்கள், பசுமையான உணவுகள், தயிர் போன்றவை விரைவில் விலையேற்றத்தை காணும். அதன் பின் சுகாதாரம் மற்றும் அழகு பொருட்களிலும் விலை உயரும். எனினும், மொத்தமாக இந்த உயர்வு முந்தைய பெரிய பணவீக்க அளவிற்கு சமமாக இருக்காது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan