இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் அட்டை கட்டண முறை விரைவில்
18 சித்திரை 2026 சனி 16:51 | பார்வைகள் : 218
இலங்கை போக்குவரத்துச் சபையின் அனைத்து பேருந்துகளிலும் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக கார்ட் முறையை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (16) மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதிகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
அடுத்த சில மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய கட்டண முறையின் மூலம் பயணிகள் மிக வேகமாகவும் எளிதாகவும் தமது பயணக் கட்டணங்களை செலுத்த முடியும்.
மேலும், இலங்கை போக்குவரத்துச் சேவையை அடுத்த ஆண்டுகளுக்குள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி நவீனமயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan