ஈரான் துறைமுகங்களைச் சுற்றி போர்க்கப்பல்களை களமிறக்கிய அமெரிக்கா
14 சித்திரை 2026 செவ்வாய் 06:03 | பார்வைகள் : 310
அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களைச் சுற்றி கடற்படை தடுப்பை அறிவித்து, 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை களமிறக்கியுள்ளது.
இதில் USS Tripoli (LHA 7) என்ற அம்ஃபிபியஸ் அசால்ட் கப்பல், F-35B Lightning II ஸ்டெல்த் போர் விமானங்களையும் MV-22 Ospreys ஹெலிகாப்டர்களையும் இயக்குகிறது.
இந்த தடுப்பு 1400 GMT-இல் தொடங்கப்பட்டு, ஈரான் துறைமுகங்களில் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கப்பல்களுக்கும் பொருந்தும் என அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரான் அல்லாத துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு இடையூறு செய்யாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் போர் கப்பல்கள் எங்கள் தடுப்புக்கு அருகில் வந்தால் உடனடியாக அழிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
"ஈரான் கடற்படையின் பெரும்பாலான கப்பல்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சில போர் கப்பல்கள் எங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இல்லை. ஆனால் அவை எங்கள் தடுப்புக்கு அருகில் வந்தால் உடனடியாக அழிக்கப்படும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance தலைமையிலான குழு, ஈரான் போருக்கு முடிவுகாண முயன்றாலும், ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
இரு வார தற்காலிக போர்நிறுத்தம் இருந்தபோதிலும், அமெரிக்கா இந்த தடுப்பை அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா-ஈரான் உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan