Paristamil Navigation Paristamil advert login

தெஹ்ரானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு சத்தங்கள்!

தெஹ்ரானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு சத்தங்கள்!

24 சித்திரை 2026 வெள்ளி 10:30 | பார்வைகள் : 1523


ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை 23.04.2026 மாலை வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) செயற்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதல் முறையாக வான்வழி நடவடிக்கைகள் குறித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

மேற்கு தெஹ்ரானில் வான் பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஐ.ஆர்.என்.ஏ அரசு ஊடகம் கூறியதைத் தொடர்ந்து ஈரான் முழுவதிலும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்த்தரப்பு இலக்குகளை எதிர்கொள்வதற்காக இந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் பல இடங்களில் செயற்பட்டதாக கூறப்பட்டபோதிலும் அந்த இலக்குகள் எவையென இதுவரை குறிப்பிடப்படவில்லை.