ஜன நாயகன் முடங்கியது ஏன் ?
12 பங்குனி 2026 வியாழன் 15:02 | பார்வைகள் : 201
தளபதி விஜய்யின் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான படம் தான் ‘ஜன நாயகன்’. விஜய்யின் நடிப்பில் வெளிவரவிருக்கும் கடைசித் திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் அரசியல் களத்திற்கான திரைப்படமாகவும் இருந்ததால் சென்சார் வாரியத்தின் தடைகளால் இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை: ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்த திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் மற்றும் ராணுவ சின்னங்களைப் பயன்படுத்துவது குறித்த ஆட்சேபனைகளால், மறுதணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.மறுதணிக்கை குழுவின் பரிசீலனை மார்ச் 9, 2026-ல் நடைபெறவிருந்த நிலையில், குழு உறுப்பினரின் உடல்நலக்குறைவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி, பின்னர் வழக்கை வாபஸ் பெற்று, மறுதணிக்கை குழுவை நம்பியுள்ளது.
அக்டோபர் 2024-ல் தொடங்கி, ஆகஸ்ட் 2025-ல் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டாலும், பின்னர் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ஆட்சேபனை எழுப்பியதால் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, படத்தை வெளியிட அனுமதி அளித்தார். ஆனால், இரு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள். ரசிகர்கள் பலரும் படத்தை வெளிவிட வேண்டும் என்று கோயில்களுக்குச் சென்று வேண்டிக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள். எதுவும் நடைபெறவில்லை. சினிமா பிரபலங்களான இத்திரைப்படத் தடைக்கு கமல்ஹாசன், பா.இரஞ்சித் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து, படைப்புச் சுதந்திரத்திற்கு ஆபத்து என கருத்துத் தெரிவித்தனர்.
மார்ச் 2026-ல் மறுதணிக்கை முடிந்து சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே, புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில், படத்தின் வெளியீடு ஜூன் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் KVN Productions படத்தின் மீதான தடைகளை நீக்கி, விரைவில் திரைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறது படக் குழு






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan