எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, IEA உறுப்பினர்கள் பிரான்ஸ் உட்பட 400 மில்லியன் பாறல் கையிருப்பு வெளியீடு!!
11 பங்குனி 2026 புதன் 16:10 | பார்வைகள் : 2551
சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உறுப்பினர் நாடுகள், அதில் பிரான்சும் சேர்ந்து, மூலதன எண்ணெய் கையிருப்பிலிருந்து 400 மில்லியன் பாறல் எண்ணெயை சந்தைக்கு வெளியிட முடிவு செய்துள்ளன. இந்த அறிவிப்பை IEA நிர்வாக இயக்குநர் இன்று வெளியிட்டுள்ளார். உலக சந்தையில் எண்ணெய் அளவை அதிகரித்து, அதன் மூலம் எண்ணெய் விலையையும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் விலையையும் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
இந்த முடிவு, ஈரான் தொடர்பான மோதலால் உருவான பொருளாதார மற்றும் ஆற்றல் அழுத்தங்களை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ளது. OECD நாடுகளில் IEA கட்டமைப்பின் கீழ் ஒரு பில்லியன் பாறலுக்கும் அதிகமான எண்ணெய் கையிருப்புகள் உள்ளதாக பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் ரோலான் லெஸ்கியூர் (Roland Lescure)தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இத்தகைய கையிருப்புகள் சில முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன; ஆனால் இப்போது வெளியிடப்படுவது இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய அளவாகும்.
இந்த அறிவிப்பின் பின்னர் உலக சந்தையில் Brent எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. ஒரு பாறல் 119.50 டாலராக இருந்த விலை 90 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது. அரசு, இந்த விலை குறைப்பு பெட்ரோல் நிலையங்களிலும் விரைவாக பிரதிபலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அரசு கூட்டம் நடத்தி, விலை கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan