Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் இருந்து விடுதலையாகி பிரான்சிற்கு திரும்பும் செசில் கோலர் மற்றும் ஜாக் பரி!!

ஈரானில் இருந்து விடுதலையாகி பிரான்சிற்கு திரும்பும் செசில் கோலர் மற்றும் ஜாக் பரி!!

7 சித்திரை 2026 செவ்வாய் 21:56 | பார்வைகள் : 572


ஈரானில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் குடிமக்கள் செசில் கோலர் மற்றும் ஜாக் பரி விடுதலையாகி, பிரான்ஸிற்குத் திரும்பி வருகின்றனர் என்று ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் அறிவித்தார். 

அவர்கள் முதலில் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் பிரான்ஸ் தூதரகத்தில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரான்ஸ் தூதருடன் தூதரக பாதுகாப்பில் ஈரானை விட்டு புறப்பட்டு தற்போது அசர்பைஜானில் உள்ளனர். வெளியுறவு அமைச்சர் ஜோன்-நோயல் பரோ அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே தொடர்பு கொண்டு, அவர்கள் விரைவில் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விடுதலை செய்தி அவர்களின் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் மிகுந்த உணர்ச்சியுடன் வரவேற்றனர். பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் விடுதலையானது மிகப்பெரிய நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் எவ்வாறு விடுதலையானார்கள் என்பது இன்னும் தெளிவாக இல்லை. 2022 ஆம் ஆண்டு உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் நீண்டகால சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர், மேலும் இந்த வழக்கு ஈரானின் “பிணையர் தூதரகம்” என்ற நடைமுறையின் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.