Paristamil Navigation Paristamil advert login

சவூதி - பஹ்ரைன் பாலம் மீண்டும் திறப்பு

சவூதி - பஹ்ரைன் பாலம் மீண்டும் திறப்பு

7 சித்திரை 2026 செவ்வாய் 15:36 | பார்வைகள் : 211


சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவையும் இணைக்கும் கிங் ஃபஹ்ஹத் பாலம்  ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் சில மணிநேரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (ஏப் 07) காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கிங் ஃபஹ்ஹத் பால அதிகாரசபை தனது எக்ஸ் தளத்தில், பஹ்ரைனை ஏனைய அரபு நாடுகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதை மீண்டும் பொதுப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஈரானிடமிருந்து வரக்கூடிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.


இன்று அதிகாலை ஈரான், சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து 7 பாலோஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்த போதிலும், அவற்றின் சிதறல்கள் அல்-ஜுபைல் பகுதியிலுள்ள எரிசக்தி உட்கட்டமைப்புகளுக்கு அருகில் விழுந்துள்ளன. அங்குள்ள சில பெற்றோலிய வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சேத விபரங்கள் தொடர்பில் ஆய்வுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாலம் திறக்கப்பட்டாலும், பஹ்ரைனின் வான் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை.

ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலனால் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பாலமே பஹ்ரைன் மக்களுக்கான பிரதான போக்குவரத்து வழியாக மாறியுள்ளது.