Paristamil Navigation Paristamil advert login

Paris: வங்கிகளுக்கு இடையிலான அச்சுறுத்தலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு!!!!

Paris: வங்கிகளுக்கு இடையிலான அச்சுறுத்தலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு!!!!

2 சித்திரை 2026 வியாழன் 22:03 | பார்வைகள் : 535


பரிசில் வங்கிகளை குறிவைத்து அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், நகர காவல் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது. மார்ச் 28 அன்று Bank of America மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் தடுக்கப்பட்டதையும், Goldman Sachs மீது புதிய அச்சுறுத்தல்கள் இருப்பதையும் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத, கலாச்சார, தூதரக மற்றும் பொருளாதார முக்கிய இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Rue La Boétie பகுதியில் வெடிகுண்டு வெடிக்கத் தவறிய சம்பவத்திற்குப் பிறகும் அபாயம் நீங்கவில்லை. அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வந்த தகவலின் படி, ஈரான் ஆதரவு குழு கட்டிடங்களை வெடிகுண்டுகளால் தாக்க திட்டமிட்டதாக எச்சரிக்கப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 27  இரவு, 17 வயது இளைஞர் ஒருவர் கைவினை வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டார். அந்த சாதனம் பெரும் தீப்பரவலை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதில், நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை பிரான்ஸ் உளவுத்துறை மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது. “Harakat Ashab al-Yamin al-Islamiya” என்ற ஈரான் ஆதரவு குழுவுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள இடைத்தரகர்களின் மூலம் இத்தகைய தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருக்கலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.