எரிவாயு கட்டணம் - ஈரான் போரின் காரணமாக அடுத்த மாதங்களில் என்ன எதிர்பார்க்கலாம்?
3 பங்குனி 2026 செவ்வாய் 20:25 | பார்வைகள் : 721
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு போரின் விளைவாக, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் அடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சில் வீட்டு வெப்பத்திற்கான குறியீட்டு எரிவாயு விலை ஏற்கனவே 5,3% உயர்ந்துள்ளது.
சர்வதேச அரசியல் பதற்றம், பிரெஞ்சு மக்களின் கட்டணங்களில் நேரடியாகப் பிரதிபலிக்கப் போகிறது.
அமெரிக்கா பெப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்திய வான்வழி தாக்குதல்கள், ஐரோப்பாவில் எரிவாயு விலைகளை மீண்டும் உயர்த்தும் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.
ஒப்பந்தங்களின் மெகாவாட்‑மணிக்கு விலை ஒரு வாரத்திற்குள் 84,4% உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், பிரான்சில் சக்தி வள விலைகளில் ஏற்கனவே முதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையமான CRE , மார்ச் 1 முதல் எரிவாயு குறியீட்டு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
- வீட்டு வெப்பத்திற்கான பயன்பாட்டில் : 105,3%
- சமையல்-சூடுநீர் பயன்பாட்டில் : 104%
ஒப்பிடுவதற்காக, சமையல-சூடுநீர் பயன்பாட்டுக்கான இந்த விலை, ஜூலை 2025 முதல் இதுவரை எந்த உயர்வையும் சந்திக்கவில்லை.
நினைவூட்டலாக, 2023 ஜூன் மாதத்தில் ஒழுங்குமுறை விலை முடிவுக்கு வந்ததிலிருந்து, CRE நிர்ணயிக்கும் இந்த குறியீட்டு விலை, பெரும்பாலான பிரான்ஸ் எரிவாயு வழங்குநர்களுக்கு முக்கியமான குறிக்கோளாக உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan