பிரான்ஸ் நிறுவும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு!
3 பங்குனி 2026 செவ்வாய் 19:07 | பார்வைகள் : 694
பிரான்ஸ், ஏவுகணை எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை சைப்ரஸில் (Chypre) நிறுவுகின்றது என்று மத்தியதரைக் கடல் தீவான சைப்ரஸின் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இது, தீவில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தளத்தை ஈரான் தாக்கிய மறுநாளில் வெளியான அறிவிப்பாகும்.

கிரீஸ் ஏற்கனவே ,இரண்டு போர்க்கலங்களையும் F‑16 விமானங்களையும் அனுப்பியுள்ளது. மேலும் பல நாடுகள் சைப்ரஸுக்கு உதவ வர உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
'பிரான்ஸின் உதவி உறுதி செய்யப்பட்டு உள்ளது. ,எது ஏவுகணை எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளுடன் கூடிய ஒரு போர்க்கலத்தைக் குறிக்கிறது,' என்று அரசின் பேச்சாளர் கான்ஸ்தோந்தினோஸ் லெட்டிம்பியோட்டிஸ் (Konstantinos Letymbiotis) தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது, பிரான்ஸ் ,இராணுவத் தலைமையகம் ,எந்தத் தகவல் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பியிருக்கவில்லை!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan