Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

21 மாசி 2026 சனி 17:28 | பார்வைகள் : 274


தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது:

கண்டி மாவட்டம்: யட்டிநுவரை, தொழுவ, உடுதும்பரை, கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க, மாவனல்லை

மாத்தளை மாவட்டம்: இரத்தோட்டை, அம்பகமுவ கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ, உக்குவளை

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி

இதேவேளை, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது:

பதுளை மாவட்டம்: ஹல்துமுல்லை

நுவரெலியா மாவட்டம்: நில்தண்டஹின்ன, வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம்: அயகம, கிரியெல்ல

மேலும், பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது:

பதுளை மாவட்டம்: மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஹப்புத்தளை, பசறை

காலி மாவட்டம்: நியகம

அம்பாந்தோட்டை மாவட்டம்: வலஸ்முல்ல

கண்டி மாவட்டம்: உடுதும்பரை, பாததும்பரை, உடபலாத்த, உடுநுவரை, பஸ்பாகே கோரளை, பாதஹேவாஹெட்ட

கேகாலை மாவட்டம்: தெரணியகல

மொனராகலை மாவட்டம்: படல்கும்புர

நுவரெலியா மாவட்டம்: மேற்கு கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பகமுவ, கிழக்கு கொத்மலை மற்றும் மத்துரட்ட

இரத்தினபுரி மாவட்டம்: குருவிற்ற, கலவான, எஹெலியகொட மற்றும் கொலொன்ன

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று இரவு 08.30 மணி முதல் நாளை இரவு 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்