இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்புடன் ராகுலுக்கு தொடர்பு; மத்திய அமைச்சர் புகார்
19 மாசி 2026 வியாழன் 12:33 | பார்வைகள் : 151
இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்புடன் ராகுலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து லோக்சபா செக்ரட்டரி விசாரித்து வருகிறது என அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நிருபர்களிடம் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது: ராகுல் தொடர்ந்து சபையில் நின்று பொய் சொல்லி வருவதால், அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி பாஜ எம்பி நிஷிகாந்த் துபே ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்புடன் ராகுலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து லோக்சபா செக்ரட்டரி விசாரித்து வருகிறது.
ஏஐ நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு சவாலானது, ஆனால் அது பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணமாக, மின்சாரத் துறையில் திருட்டு நடந்தால், எந்தப் பகுதியில் அது நடக்கிறது, யார் அதைச் செய்கிறார்கள், எவ்வளவு மின்சாரம் வெளியேறுகிறது, எவ்வளவு மின்சாரம் நுகரப்படுகிறது என்பதைக் கண்டறிய ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று நான் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.
மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் சனாதன தர்மத்திற்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். ஆர்அமைப்பா ஒரு கலாச்சார அமைப்பாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மக்களிடையே தேசியவாதம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் திசையில் செயல்படுகிறது. இது 100 ஆண்டுகள் ஆகிறது . அந்த வகையான அனுபவம் சிறியதல்ல. ஆர்எஸ்எஸ் ஒரு அனுபவம் வாய்ந்த அமைப்பாகும். இவ்வாறு அர்ஜூன் ராம் மேக்வால் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan