Paristamil Navigation Paristamil advert login

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை எவ்வாறு உண்ண வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை எவ்வாறு  உண்ண வேண்டும்  தெரியுமா?

15 தை 2026 வியாழன் 15:01 | பார்வைகள் : 206


உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடுவதை விட, அவற்றை நீரில் ஊறவைத்து உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதற்கான முக்கிய காரணம் அவற்றில் உள்ள 'பைடிக் அமிலம்' ஆகும். இந்த அமிலம் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. ஊறவைப்பதன் மூலம் இந்த அமிலத்தின் வீரியத்தை சிதைத்து, ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யலாம்.

வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் கசப்புத்தன்மை, 12 மணி நேரம் ஊறவைக்கும்போது மென்மையாகி செரிமானத்திற்கு எளிதாகிறது. அதேபோல், முந்திரியை 2-4 மணி நேரம் ஊறவைப்பது ஒவ்வாமையை தடுத்து, நொதிகளை சீராக்கும்.

நார்ச்சத்து மிகுந்த அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து உண்பதால், குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் நீங்கும். செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுக்காமல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த ஊறவைக்கும் முறை பெரிதும் உதவுகிறது. தினமும் சரியான அளவில் ஊறவைத்த நட்ஸ்களை உண்பது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்