Paristamil Navigation Paristamil advert login

1.5 பில்லியன் ஆண்டுகள் வயதுடைய சுழல் அண்டம்: இந்திய வானியலாளர்கள் கண்டுபிடிப்பு

1.5 பில்லியன் ஆண்டுகள் வயதுடைய சுழல் அண்டம்: இந்திய வானியலாளர்கள் கண்டுபிடிப்பு

4 மார்கழி 2025 வியாழன் 15:46 | பார்வைகள் : 112


இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 1.5 பில்லியன் ஆண்டுகள் வயதுடைய சுழல் அண்டம் ஒன்றை கண்டறிந்துள்ளது.

 

இந்திய வானியலாளர்கள் மிகப்பெரிய மற்றும் அழகிய வடிவம் கொண்ட சுழல் அண்டம்(Spiral Galaxy) ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

 

இது சுமார் 1.5 பில்லியன் ஆண்டு வயதுடைய காலத்தை சேர்ந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரபஞ்சத்தின் தற்போதைய வயது சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் வயதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள அண்டம் ஒன்றை இப்போது கண்டறிந்துள்ளனர்.

 

இந்த வானியலாளர்கள் குழுவின் ஆய்வு, ஐரோப்பிய அறிவியல் இதழான Astronomy and Astrophysics இதழில் நவம்பர் மாத பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்