Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா ?

24 ஐப்பசி 2025 வெள்ளி 14:29 | பார்வைகள் : 230


பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரூல்ஸ் படி, வார வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வார இறுதியில் வெளியேற்றப்படுவார். இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வார நாமினேஷனில் வியானா, பிரவீன், சுபிக்‌ஷா, துஷார், கலை, ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் சிக்கி இருந்தனர். இவர்களில் வியானா அதிகபட்ச வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரவீன் ராஜ், சுபிக்‌ஷா, துஷார் மற்றும் கலையரசன் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்று தப்பி உள்ளனர்.

இறுதியாக ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை தான் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மூவரில் மிகவும் கம்மியான வாக்குகளை பெற்றுள்ள போட்டியாளர் என்றால் அது ஆதிரை தான். அவரைவிட 2 ஆயிரம் வாக்குகள் அரோரா அதிகம் பெற்றுள்ளதால், இந்த வாரம் ஆதிரை எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்பு உள்ளது. பிக் பாஸ் வீட்டில் சண்டைக் கோழியாக இருந்து வந்த ஆதிரை, முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்களுடன் சண்டை போட்டு வந்ததால், அவருக்கான மவுசும் குறையத் தொடங்கியது. அதனால் மக்கள் அவரை வெளியேற்ற முடிவெடுத்து உள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்