Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொதியில் சிக்கிய மர்மம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொதியில் சிக்கிய மர்மம்

18 கார்த்திகை 2025 செவ்வாய் 09:53 | பார்வைகள் : 416


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள்  அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

சூட்கேஸில் 11 கிலோகிராம் 367 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.113,670,000 என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சூட்கேஸ் மார்ச் 17 ஆம் திகதி கைவிடப்பட்டதாகவும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா, திங்கட்கிழமை (17) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்  புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்