Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் துப்பாக்கிச் சூடு - யாழில் மூவர் அதிரடியாக கைது

கொழும்பில் துப்பாக்கிச் சூடு - யாழில் மூவர் அதிரடியாக கைது

8 கார்த்திகை 2025 சனி 15:10 | பார்வைகள் : 187


கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர்.

இந்த சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்