Paristamil Navigation Paristamil advert login

இனிய தமிழின்

இனிய தமிழின்

28 புரட்டாசி 2025 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 2838


இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை


உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை

எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து
இதம்தரும் வீணை இசையது கவிதை

வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை

உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை

மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை

புத்துயிர் இயற்கையின் வற்றாத ஊற்று ஒரு கவிதை

சொக்கும் விழியின் பக்குவமறிந்து

விக்கும் தொண்டையின் ஆர்வம் தெரிந்து

நடுங்கும் கரத்தின் நளினம் புரிந்து

சிவக்கும் கன்னத்தின் வெட்கம் சுவைத்து

வாடும் உதட்டை பதமும் உழுது

பொங்கும் உள்ளத்தில் தங்கும் இந்த கவிதை…

 

எழுத்துரு விளம்பரங்கள்