Paristamil Navigation Paristamil advert login

ஆடல் நாயகனே சிவனே

ஆடல் நாயகனே சிவனே

22 புரட்டாசி 2025 திங்கள் 12:57 | பார்வைகள் : 917


என் உயிர் நாடிடும் சிவ தாண்டவம்

பூவை நோக்கும் கண்களிலே
அனல் கோபம் வீசிடும் தாண்டவம்

சிவனே மாயனே
என் சிந்தையில் சிறந்தவனே

இராக தாளங்களினூடே எந்தன்
இரணங்களை ஆற்றுகின்றேன்
இறையே நின் பெயரை ஓதுகின்றேன்

ஒற்றை மனதினிலே பாயும்
ஓராயிரம் அம்புகளையும்
உடைத்தெறிந்து ஆடுகின்றேன்
உமையனே நீ என்றோர் துணையுடன்


இதழ்கள் புரியும் இளநகை உனக்காய்
இமைகளின் ஈரத்தில் உன் முகமே தெரிய
சினுங்கிடும் பாத சலங்ககைகளுடன்
சிவனே உனக்காய் ஆடுகின்றேன்

ஒப்பற்ற ஓர் அமைதி என் மனதை
ஒருங்கே சூழ்ந்து ஆளவே – சடையனே
சகிதமும் என்னுடன் சலங்கை யோசையுடன்
சதை கொண்ட உயிராய் நீ ஆடிட வேண்டும்

மாலைநேர செஞ்சுடர் ஞாயிருடன்
மோகங் கொண்டு ஆடச் செய்தேன்
நளினமாய் என் மென் இடையசைத்து
நந்தகுமாரனே நின்னுடனே ஆடிட வேண்டும்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்