ஆடல் நாயகனே சிவனே
22 புரட்டாசி 2025 திங்கள் 12:57 | பார்வைகள் : 1744
என் உயிர் நாடிடும் சிவ தாண்டவம்
பூவை நோக்கும் கண்களிலே
அனல் கோபம் வீசிடும் தாண்டவம்
சிவனே மாயனே
என் சிந்தையில் சிறந்தவனே
இராக தாளங்களினூடே எந்தன்
இரணங்களை ஆற்றுகின்றேன்
இறையே நின் பெயரை ஓதுகின்றேன்
ஒற்றை மனதினிலே பாயும்
ஓராயிரம் அம்புகளையும்
உடைத்தெறிந்து ஆடுகின்றேன்
உமையனே நீ என்றோர் துணையுடன்
இதழ்கள் புரியும் இளநகை உனக்காய்
இமைகளின் ஈரத்தில் உன் முகமே தெரிய
சினுங்கிடும் பாத சலங்ககைகளுடன்
சிவனே உனக்காய் ஆடுகின்றேன்
ஒப்பற்ற ஓர் அமைதி என் மனதை
ஒருங்கே சூழ்ந்து ஆளவே – சடையனே
சகிதமும் என்னுடன் சலங்கை யோசையுடன்
சதை கொண்ட உயிராய் நீ ஆடிட வேண்டும்
மாலைநேர செஞ்சுடர் ஞாயிருடன்
மோகங் கொண்டு ஆடச் செய்தேன்
நளினமாய் என் மென் இடையசைத்து
நந்தகுமாரனே நின்னுடனே ஆடிட வேண்டும்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan