Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கைக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கியுள்ளோம்..பாகிஸ்தான் அணித்தலைவர்

 இலங்கைக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கியுள்ளோம்..பாகிஸ்தான் அணித்தலைவர்

22 புரட்டாசி 2025 திங்கள் 09:57 | பார்வைகள் : 878


இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கான காரணத்தை பாகிஸ்தான் அணித்தலைவர் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு எதிரான ஆசியப் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதன் பின்னர் பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அஹா, "நாங்கள் இன்னும் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை, ஆனால் நாங்கள் அதை அடைகிறோம். அருமையான ஆட்டம், ஆனால் Powerplayயில் அவர்கள் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார்கள்.


10 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் இருந்த நிலையைப் பார்த்தால், இன்னும் 10 - 15 ஓட்டங்கள் எடுத்திருக்கலாம்.

170-180 என்பது ஒரு நல்ல ஸ்கோர், ஆனால் Powerplayயில் அவர்கள் நன்றாக துடுப்பாட்டம் செய்தனர், அதுதான் வித்தியாசம்" என்றார்.

மேலும் அவர், "பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை நோக்கி செல்வதை நீங்கள் பார்த்தால், நீங்கள் அதை மாற்ற வேண்டும், டி20களில் அது அப்படித்தான்.

நிறைய நேர்மறையான அம்சங்கள் உள்ளன. அது ஃபஹார், பர்ஹான் ஆகியோரின் துடுப்பாட்டம் மற்றும் ஹாரியின் பந்துவீச்சு. இலங்கைக்கு எதிரான அடுத்த ஆட்டத்தை எதிர்நோக்குகிறோம்" என்றார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் தோல்வியுற்றுள்ளதால் இரு அணிகளும் மோதும் அடுத்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்