TGV தொடருந்தில் €350,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

30 ஆடி 2025 புதன் 19:32 | பார்வைகள் : 1674
TGV தொடருந்து ஒன்றில் பயணித்த தம்பதிகளிடம் இருந்து €350,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பரிசில் இருந்து Aix-en-Provence மாகாணத்துக்கு பயணிக்க தயாரான தம்பதிகள் இருவரிடம் இருந்து கைப்பை ஒன்று திருடப்பட்டுள்ளது. ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Louis Vuitton கைப்பை ஒன்றும் அதற்குள் இருந்த 33 நகைகளும் திருடப்பட்டுள்ளன.
மொத்த நகையின் மதிப்பு €350,000 யுரோக்கள் எனவும், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் பிரெஞ்சு-கனடா இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.